மதுரை: அரசு ஊழியர்கள் பணியிடமாற்றம் செய்யப்படுவதை தண்டனையாக கருதக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. பணியிடமாற்றம் செய்து போக்குவரத்து மேலாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய ஐகோர்ட் மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. ஊழியர்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுப்பது அரசின் கடமை என்று தலைமை நீதிபதி கருத்து கூறியுள்ளார்.