கோபி: கோபி அருகே அரசூரில் ஆம்பிலன்ஸ் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 15 பேர் படுகாயமடைந்தனர். சத்தியமங்கலத்தில் இருந்து கர்ப்பிணியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸும், 50 பேருடன் சென்ற தனியார் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது. சாலையோர பள்ளத்தில் ஆம்புலன்ஸ் விழுந்ததில் ஓட்டுநர் உட்பட 3 பேரும் பேருந்திலிருந்து 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடந்தனர்.