வாரணாசி: உச்சநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து ஞானவாபி மசூதியில் 2வது நாளாக தொல்லியல் துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள 17ம் நூற்றாண்டை சேர்ந்த ஞானவாபி மசூதி இந்து கோயிலின் மீது கட்டப்பட்டுள்ளதாக என்பது தொடர்பான வழக்கில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்துவதற்கு தடை விதிப்பதற்கு உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனை தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தினார்கள்.
ஞானவாபி மசூதியில் 2வது நாளாக ஆய்வு
previous post