புதுக்கோட்டை: புதுக்கோட்டை அடப்பன் வயல் 6ம்வீதியை சேர்ந்த சிங்காரம் மகன் ஒச்சிகார்த்தி என்ற கார்த்தி (25). இவரது தங்கையும், புதுக்கோட்டை மேல 6ம் வீதியை சேர்ந்த அரியமுத்து மகன் சீனிவாசனும் (29) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு கார்த்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தால் அவருக்கும் சீனிவாசனுக்கும் இடையே சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை விஸ்வதாஸ் தெருவில் புதிதாக கட்டி வரும் வீட்டினை பார்க்க கார்த்தி நேற்று மாலை சென்றுள்ளார். அப்போது பைக்கில் காதலன் சீனிவாசன், இவரது நண்பர்கள் நெருப்பு தினேஷ் (எ) தினேஷ் பாபு, பலூன் ஆகிய 3 பேரும் வந்து கார்த்தியை கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலன் உட்பட 3பேரையும் தேடி வருகின்றனர்.