புதுச்சேரி: சிறுமி கொலையால் நிலை குலைந்து விட்டேன் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சிறுமி கொலையில் மிகத் தீவிரமான நடவடிக்கையை நான் எடுப்பேன். மக்களின் போராட்டத்தில் நியாயம் இல்லை என நான் கூற மாட்டேன். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் உணர்வோடுதான் நானும் இருக்கிறேன். புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொலை வழக்கில் இருந்து குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளேன் எனவும் கூறியுள்ளார்.