காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அமுதுபடி பின்தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகள் தனலட்சுமி (37). இவருக்கு ரவிக்குமார் என்பவருடன் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், குழந்தை இல்லாததால் கணவன் – மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டநிலையில் ரவிக்குமார் வீட்டைவிட்டு வெளியில் சென்றுள்ளார்.
கணவன் வீடு திரும்பாததால் விரக்தியடைந்த தனலட்சுமி வீட்டிலுள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிவகாஞ்சி போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.