Thursday, May 16, 2024
Home » காசாவை துவம்சம் செய்த 12,000 டன் வெடிபொருட்கள்.. ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணு ஆயுதத்திற்கு சமம்: இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்கு!!

காசாவை துவம்சம் செய்த 12,000 டன் வெடிபொருட்கள்.. ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணு ஆயுதத்திற்கு சமம்: இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்கு!!

by Nithya
Published: Last Updated on

காசா: ஹமாஸ் போருக்கு நடுவே சிரியாவின் ராணுவ வட்டார தலைமையகத்தையும் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருப்பது மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினர் இடையே யுத்தம் 19-வது நாளாக நீடித்து வருகிறது. ஹமாஸின் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக கூறி காசா மீது அடுத்தடுத்து வான்வெளி தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியதால் பாலஸ்தீனம் கான்கிரீட் குவியலாக மாறி வருகிறது. இதில் ஹமாஸ் போராளிகளுடன் பச்சிளம் குழந்தைகள் உட்பட எண்ணெற்ற அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் காசாவின் 400 இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியதில் 350 குழந்தைகள் உட்பட 700 பேர் கொல்லப்பட்டு இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதே வேளையில் சிரியா மீதும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி இருப்பதால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. அதாவது சிரியா வீசிய ஏவுகணை தாக்குதலுக்கு போர் விமானங்கள் மூலம் பதிலடி கொடுத்திருப்பதாகவும் இதில் அந்நாட்டின் ராணுவ வட்டார தலைமையகம் தாக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே அந்நாட்டின் விமான நிலையங்கள், ராணுவ படைத்தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் பின்னர் மன்னிப்பு கோரியிருந்தது.

இதனிடையே காசா மக்களுக்கு தேவையான எரிபொருள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் எடுத்து செல்வதில் சிரமம் நீடிக்கிறது. எரிபொருள் தட்டுப்பாட்டால் மின்சாரமின்றி காசா மருத்துவமனைகள் இருளில் மூழ்கியுள்ளன. இங்குபேட்டரில் உள்ள குழந்தைகள், அவசர சிகிச்சையில் உள்ளவர்களின் நிலையும் கேள்வி குறியாகி இருக்கிறது. காயமடைந்தவர்களுக்கு செல்போன் வெளிச்சத்திலேயே சிகிச்சை அளிக்கப்படும் சோக காட்சிகளும் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் போர் நிறுத்தத்திற்கு முரண்டு பிடிக்கும் இஸ்ரேல் அரசு ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணு அயுதத்திற்கு இணையான 12,000 டன் வெடி பொருட்கள் பயன்படுத்தி உள்ளதாக ஹமாஸ் இயக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

You may also like

Leave a Comment

nineteen − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi