சென்னை: வாயுக்கசிவால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களிடம் உடல் நலம் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். சென்னை எண்ணூரில் கோரமண்டல் உர தொழிற்சாலையில் நேற்று அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. வாயுக்கசிவால் பொதுமக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.