பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே நெல்லூர் கருங்குளம் கண்மாய் பகுதியில் நேற்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், அவர்கள் சித்தரேவு பகுதியை கார்த்திகை ராஜா (39), சவுந்தரபாண்டியன் (29), திருவள்ளூர் மாவட்டம் எடப்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (55), பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (46), நவீன் (40) என தெரிய வந்தது. இவர்கள் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த ராஜா என்பவரிடம் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து, இப்பகுதியில் சில்லரையாக விற்பனை செய்வது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா, 2 டூவீலர்கள் மற்றும் ரூ.32,000 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. ராஜாவை தேடி வருகின்றனர். கைதான சுரேஷ்குமார், பாஜவின் வத்தலக்குண்டு வடக்கு ஒன்றிய வர்த்தகர் பிரிவின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.