சென்னை: கடைசி விவசாயி’ பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 2 தேசிய விருதுகளை மர்ம கும்பல் மீண்டும் அவரின் வீட்டில் வைத்துள்ளது. கடந்த 8ம் தேதி தனது வீட்டில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம், 5 சவரன் நகை, தேசிய விருதுகள் திருடு போனதாக இயக்குநர் புகார் அளித்த நிலையில், நேற்று நள்ளிரவில் வீட்டு வாசலில் மன்னிப்பு கடிதத்துடன் தேசிய விருதுகளை திருடர்கள் வைத்து சென்றுள்ளனர்.