ஸ்ரீஹரிகோட்டா: ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக வானில் ஏவப்பட்ட மாதிரி விண்கலத்தை இந்திய கடற்படை மீட்டது. பாராசூட் மூலம் கடலில் இறங்கிய மாதிரி விண்கலத்தை பத்திரமாக மீட்டுள்ளதாக இந்திய கடற்படை அறிவித்துள்ளது. மாதிரி விண்கலம் தரையிலிருந்து 16.6 கி.மீ அனுப்பப்பட்டு பாராஷூட் மூலம் இறக்கி சோதனை செய்யப்பட்டது. 16.6 கி.மீ. தூரம் சென்றதும் விண்கலத்தில் வீரர்கள் அமரும் பகுதி தனியாக பிரிந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.