பெங்களூரு: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். வரும் ஜூன் மாதத்தில் 12 முதல் 14 கி.மீ. உயரத்தில் ராக்கெட்டுகளை அனுப்பி சோதிக்கும் பணிகள் நடைபெறும் எனவும் மேலும் ராக்கெட்டுகளை ஹெலிகாப்டர்கள் மூலம் விழச் செய்து சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் சோம்நாத் தெரிவித்துள்ளார்.