நீலகிரி: நீலகிரி மாவட்டம் அத்திகல் பகுதியில் நண்பரின் திருமணத்திற்கு வரும் போது, காமராஜர் அணையில் குளித்த நாமக்கலை சேர்ந்த ஐ.டி. பொறியாளர் ராம்குமார் (28) தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். மறுகரைக்கு நீந்திச் சென்ற அவர் திரும்ப வரும் போது நீச்சல் அடிக்க முடியாமல் தண்ணீரில் தத்தளித்து மூழ்கினார். நண்பர்களுக்கும் நீச்சல் தெரியாததால் அவர்களாலும் காப்பாற்ற முடியவில்லை. உடலைக் கைப்பற்றிய புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.