துரைப்பாக்கம்: தாம்பரம், பல்லாவரம், பம்மல், குரோம்பேட்டை, சேலையூர், மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், பெரும்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகள் லீசுக்கு உள்ளது என சன் ஹோம் என்ற தனியார் நிறுவனம் ஆங்காங்கே விளம்பரப்படுத்தி உள்ளது.
இதை பார்த்து ஏராளமானோர் அந்த நிறுவனத்தை நடத்தி வரும் தம்பதியிடம் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கொடுத்து, வீடுகளில் லீசுக்கு வசித்துள்ளனர். ஆனால், அவர்கள் வாடகை வீட்டில் குடியமர்த்தி ஏமாற்றியது தெரிந்தது. இதுபற்றி பாதிக்கப்பட்டவர்கள் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.