சென்னை: முன்னாள் கிரிக்கெட் வீரர் லட்சுமண் சிவராமகிருஷ்ணனுக்கு தமிழக பாஜவில் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லட்சுமண் சிவராமகிருஷ்ணன். இவர் 1987ம் ஆண்டு இந்தியாவிற்காக தனது இறுதிப்போட்டியில் விளையாடி ஓய்வு பெற்றார். 2017ம் ஆண்டு முதல் தமிழ் வர்ணனையும் செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய பாஜ தலைவர் எல்.முருகன் முன்னிலையில் அவர் பாஜவில் இணைந்தார்.அவருக்கு தமிழக பாஜ விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அந்த பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி நேற்று அறிவித்துள்ளார்.