சென்னை: வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு ஸ்பெயின் புறப்படுகிறார். ஜன.7, 8-ல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடர்ச்சியாக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் வெளிநாடு செல்கிறார்.