லண்டன்: இங்கிலாந்து மன்னர் சார்லசை தொடர்ந்து இளவரசி கேத் மிடில்டனுக்கும் புற்றுநோய் உள்ளது பரபரப்பை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு சமீபத்தில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அவரது மகன் இளவரசர் வில்லியம் மனைவியும், இளவரசியுமான கேத் மிடில்டனுக்கும்(42) புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் அவருக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை நடந்தது.
இந்நிலையில் நேற்று இளவரசி கேத் மிடில்டன் வௌியிட்ட வீடியோவில், “எனக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது. இது வில்லியம்சுக்கும், எனக்கும் நம்ப முடியாத அதிர்ச்சி. குடும்பநலனுக்காக இதை வௌியே சொல்லவில்லை. சிகிச்சை பெற்று வரும் நான் இப்போது நலமுடன் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் மனஉறுதி அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார். அவரது வீடியோ செய்தியை பார்த்த லண்டன் மக்கள் இளவரசி கேத் மிடில்டன் விரைவில் நலம்பெற வேண்டும் என வாழ்த்து செய்திகளை அனுப்பி வருகின்றனர்