திருவள்ளூர்: தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி பின்னர் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதால், பழவேற்காடு மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்ப மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. நாளை (7ம் தேதி) முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.