ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து காலவரையற்ற போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பது அதிகரித்து வருகிறது. போராட்டம் நடத்துவது தொடர்பாக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.