சென்னை: 20 ஆண்டுகளில் 6,658 தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர் என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். காங்கிரஸ் காலத்தை விட பாஜக ஆட்சியில் கைதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அமைச்சரின் பதிலில் வழக்கம்போல அலுவல் ரீதியான புள்ளிவிபரங்கள், வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்றைய தேவையோ அரசியல் ரீதியான உறுதிப்பாடு என சு.வெங்கடேசன் எம்.பி. எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.