புதுக்கோட்டை: மீன்வளத்துறை அதிகாரியை கடலில் தள்ளிய விசைப்படகு மீனவர்கள் 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இரட்டைமடி வலை பயன்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து சோதனைக்கு சென்ற அதிகாரி மீது தாக்குதல் நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் சிவக்குமார், சூர்யபிரகாஷ், கருப்பசாமி, சூர்யா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.