இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 114 ரன்களில் சுருண்டது. பிரிஜ்டவுனில் முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 23 ஓவரில் 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 43, அலிக் அத்தானாஸ் 22 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் குல்தீப் யாதவ் 4, ஜடேஜா 3, ஹர்திக் பாண்டியா, முகேஷ் குமார், ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.