வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (42), மாற்றுத்திறனாளி. இவர் அதே பகுதியில் பட்டாசு குடோன் வைத்திருந்தார். கடந்த 7ம் தேதி சுரேசும், ஊழியர் ராஜேந்திரனும் (38) பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
அப்போது, திடீரென பட்டாசுகள் வெடித்து குடோனின் மேற்கூரை பயங்கரமாக சிதறியது. இதில் படுகாயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சுரேஷ் உயிரிழந்தார்.