பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில், தீ தொண்டு நாளையொட்டி பணியின்போது பலியான தீயணைப்பு துறை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், வீர மரணமடைந்த வீரர்களை போற்றும் விதத்தில் தீயணைப்பு துறையினர் அணியும் பாதுகாப்பு உடைகள், கவசங்கள், உபகரணங்கள் கொண்டு அமைக்கப்பட்ட நினைவு சின்னத்திற்கு, திருவள்ளூர் மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையில், பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்வில் தீயணைப்பு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.