சென்னை: காணும் பொங்கல் அன்று மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை பகுதிகளில் காணாமல் போன 27 குழந்தைகள் மீட்கப்பட்டனர். 27 குழந்தைகள் சென்னை போலீசாரால் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பெற்றோர் பெயர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அடையாள அட்டை குழந்தைகளின் கைகளில் கட்டப்பட்டன.