டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் ஊழல் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது எனது உரைக்கு பதிலளிக்கத் தயாரா என எதிர்க்கட்சிகளுக்கு நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பிய நிலையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.