சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஞானவேல்ராஜா வீட்டில் நகைகள் திருடு போனது தொடர்பாக கடந்த 14இல் மாம்பலம் போலீசில் புகார் தரப்பட்டது. நகை திருட்டு குறித்து பணிப்பெண் லட்சுமியிடம் காவல்துறை விசாரித்த நிலையில் தற்கொலை முயற்சி எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரளி விதையை அரைத்துக் குடித்த லட்சுமி சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.