சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு நேற்று பிறந்த நாள். வழக்கமாக அவரது பிறந்த நாளை காங்கிரசார் உற்சாகமாக கொண்டாடுவார்கள். ஆனால், அவரது மகன் மறைவுக்கு பிறகு பிறந்தநாள் கொண்டாடுவதை தவிர்த்து வருகிறார். இந்நிலையில் ஈரோட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்துவிட்டு நேற்று மாலை அவர் சென்னை திரும்பினார். அப்போது அவருக்கு கடுமையான காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவே போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் அவரை அனுமதித்தனர். அவருக்கு எந்த விதமான காய்ச்சல் பாதித்துள்ளது என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதித்து வருகிறார்கள். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஈவிகேஎஸ்.இளங்கோவன் பிறந்த நாளை முன்னிட்டு நிர்வாகிகள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளை ரத்து செய்தனர்.