லண்டன்: இங்கிலாந்தின் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டரில் கடந்த 1994ம் ஆண்டு மரினா கோபெல் என்ற பெண் சுமார் 140 முறை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்தீப் படேல்(51) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மரினாவை குத்திக்கொன்ற சந்தீப் படேலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.