புதுடெல்லி: உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதியும், தமிழக முன்னாள் ஆளுநருமான பாத்திமா பீவி (96) மறைவு குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘நீதிபதி பாத்திமா பீவியின் மறைவு செய்தியை அறிந்து மிக்க வருத்தமடைந்தேன். அவரது வாழ்க்கை பயணத்தில் பல தடைகளை உடைத்து முன்னேறியவர். பெண்களுக்கு உத்வேகம் அளிப்பவராகவும், உண்மையான வழிகாட்டியாகவும் இருந்தார். நீதித்துறையில் அவரது பங்களிப்பு எப்போதும் போற்றப்படும்’ என்று தெரிவித்தார்.
பாத்திமா பீவி மறைவு பிரதமர் மோடி இரங்கல்
previous post