சென்னை: தந்தை, மகன் தற்கொலைக்கு பிறகாவது ஆளுநர் ரவியின் பிடிவாத குணம் மாறுமா என தெரியவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆளுநர் தன் பிடிவாதத்தை தளர்த்தி நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தந்து சட்டமாக்க வேண்டும் எனவும் நீட் தேர்வு ஒரே குடும்பத்தில், தந்தை, மகனை பலி வாங்கியிருக்கிறது எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.