Friday, May 3, 2024
Home » செலவுக்கு பணம் கேட்டு கொடுக்காததால் ‘ஹாக்கி ஸ்டிக்’கால் அடித்து தந்தை, தாய், பாட்டி கொலை: 3 பேரின் சடலத்தை எரித்த போதை மருத்துவ மாணவர் கைது

செலவுக்கு பணம் கேட்டு கொடுக்காததால் ‘ஹாக்கி ஸ்டிக்’கால் அடித்து தந்தை, தாய், பாட்டி கொலை: 3 பேரின் சடலத்தை எரித்த போதை மருத்துவ மாணவர் கைது

by Neethimaan

மகாசமுந்த்: சட்டீஸ்கரில் செலவுக்கு பணம் கேட்டு கொடுக்காததால் ‘ஹாக்கி ஸ்டிக்’கால் தந்தை, தாய், பாட்டி படுகொலை செய்து உடலை எரித்த போதை மருத்துவ மாணவரை போலீசார் கைது செய்தனர். சட்டீஸ்கர் மாநிலம் மகாசமுந்த் மாவட்டம் சிகோடா பகுதியை சேர்ந்த ஆசிரியர் பிரபாத் போய், தனது மனைவி சுலோச்சனா போய், தாயார் ஜர்னா போய், மகன் உதித் போய் ஆகியோருடன் வசித்து வந்தார். பிரபாத் போயின் மகன் உதித் போய், ராய்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். போதைப் பழக்கத்திற்கு அடிமையான உதித் போய், பணத்துக்காக தனது பெற்றோரிடம் அடிக்கடி சண்டை போடுவது வழக்கம்.

கடந்த 7ம் தேதி பிரபாத் போய்க்கும், அவரது மகன் உதித்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதே நாளில், உதித் தனது தந்தையைக் கொல்ல சதி திட்டம் தீட்டினார். வீட்டில் அனைவரும் தூங்கிய போது, நள்ளிரவு 2 மணி வாக்கில், வீட்டில் இருந்த ஹாக்கி ஸ்டிக்கால் தூங்கிக் கொண்டிருந்த தந்தையின் தலையில் சரமாரியாக தாக்கினார். ரத்த வெள்ளத்தில் அவர் கிடந்த நிலையில், தூங்கிக் கொண்டிருந்த தாய் சுலோச்சனாவை அதேபோல் கொன்றார். அதன்பின் மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த பாட்டியை கட்டையால் அடித்துக் கொன்றார். அதன்பின் மூன்று ேபரின் உடல்களை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்று தீவிர யோசனையில் உதித் இருந்தார்.

ஒரு நாள் முழுவதும் மூன்று பேரின் சடலங்களுடன் வீட்டிற்குள் அடைபட்டு கிடந்த உதித், வீட்டிற்கு பின்னால் இருந்த காலி இடத்திற்கு ஒவ்வொரு சடலமாக தூக்கிச் சென்று மரக்கட்டை மற்றும் சானிடைசரை பயன்படுத்தி எரித்தார். அதன் வீட்டிற்குள் இருந்த ரத்த கறைகளை தண்ணீர் ஊற்றி அழித்தார். தடயங்களை அழித்த பின்னர், கடந்த 12ம் தேதி சிங்கோடா காவல் நிலையத்திற் சென்று தனது தந்தை, தாய் மற்றும் பாட்டியைக் காணவில்லை என்று புகார் அளித்தார். இதற்கிடையே ஆசிரியர் பிரபாத் போயின் இளைய சகோதரர், தனது தாய், அண்ணன், அண்ணி ஆகியோர் மாயமானது குறித்து தகவலறிந்து, அண்ணனின் வீட்டிற்கு வந்தார்.

ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தது. உதித்தும் மாயமாகி இருந்ததால் அதிர்ச்சியடைந்தார். அதன்பின் வீட்டின் பின்பக்க வழியாக எட்டிக் குதித்து வீட்டிற்குள் நுழைந்தார். வீட்டில் ஆங்காங்கே ரத்தம் சிதறிக் கிடந்ததையும், வீட்டின் பின்பக்கம் ஏதோ எரிந்த அடையாளங்கள், மனித எலும்பு துண்டுகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அமித், சிங்கோடா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். பின்னர் மாயமான உதித் போயை கைது செய்து விசாரித்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘பணம் கேட்டு தர மறுத்ததால் தனது தந்தை, தாய், பாட்டி ஆகியோரை கொன்றதாக ஒப்புக் கொண்டதாக, காவல்துறை கண்காணிப்பாளர் தர்மேந்திர சிங் சாவாய் கூறினார்.

You may also like

Leave a Comment

5 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi