சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள முதியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமன் (36). இவர் நேற்று முன்தினம் இரவு விளை நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த ராகி பயிர் காவலுக்கு சென்றுள்ளார். நேற்று அதிகாலை விளைநிலை நிலத்தில் நின்ற காட்டு யானை அவர் விரட்ட முயன்றுள்ளார். அப்போது யானை ராமனை துரத்த தொடங்கியது. யானையிடம் இருந்து தப்பிப்பதற்காக ராமு அங்கும் இங்கும் ஓடியபோதும் காட்டு யானை துரத்தி தும்பிக்கையால் பிடித்து கீழே தள்ளி மிதித்தது. இதில், சம்பவ இடத்திலேயே ராமன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ராமனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக்கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.