சென்னை: சென்னை எழும்பூரில் ஏ பிளஸ் பட்டியலில் இருந்த பிரபல ரவுடி இமானை போலீசார் கைது செய்தனர். ரவுடி இமானின் கூட்டாளிகள் சுனில்குமார், முகமது ஷேக் மீரான் ஆகியோரை கைது செய்து போலீசர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். வேப்பம்பட்டில் பதுங்கி இருந்து அவ்வப்போது சென்னை வந்து குற்றச் செயலில் ரவுடி இமான் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.