சென்னை: பிரபல நடிகை வரலட்சுமி விசாரணைக்கு ஆஜராகும்படி தேசிய புலனாய்வு முகமை சம்மன் அனுப்பியுள்ளனர். போதை பொருள், ஆயுதம் கடத்தியதாக நடிகை வரலட்சுமியின் உதவியாளர் ஆதிலிங்கம் கைது செய்யப்பட்ட வழக்கில் என்.ஐ.ஏ. நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருட்கள், ஆயுதங்கள் கடத்திய வழக்கில் ஆதிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.