Thursday, May 9, 2024
Home » பிரசவத்தின்போது ஏற்படும் தாயின் உயிரிழப்பை தடுக்க கூடுதல் கவனம் வேண்டும்: விஜயபாஸ்கர் வலியுறுத்தல்

பிரசவத்தின்போது ஏற்படும் தாயின் உயிரிழப்பை தடுக்க கூடுதல் கவனம் வேண்டும்: விஜயபாஸ்கர் வலியுறுத்தல்

by Karthik Yash

சட்டப்பேரவையில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் விராலிமலை விஜயபாஸ்கர் (அதிமுக) பேசியதாவது: அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு லட்சம் தாய்மார்களுக்கு 54 பேர் மட்டுமே உயிரிழக்கும் சூழலுக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது இது 50ஆக குறைக்கப்பட்டிருக்க வேண்டும்.
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்: கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிரசவ உயிரிழப்பு 52.3 ஆக குறைக்கப்பட்டது.
விஜயபாஸ்கர்: அதிமுக ஆட்சி காலத்தில் உடல் உறுப்பு தானம் செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதில் கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: கலைஞர் முதல்வராக இருந்தபோது 2008ம் ஆண்டு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக ஒரு ஆணையம் அமைத்தார். செங்கல்பட்டு அருகே நடந்த விபத்தில் ஹித்தேந்திரன் சாலை விபத்தில் மூளைசாவு அடைந்தார். அவரது உடல் தானமாக வழங்கப்பட்டு 5, 6 உயிர்கள் பிழைக்க காரணமாக இருந்தார். ஏதோ அதிமுக ஆட்சியில்தான் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டதாக சொல்வது முறையல்ல. முதல்வர் மு.க.ஸ்டாலின மற்றும் அவரது மனைவியும் தங்களது உடலை தானமாக வழங்கி, இந்தியாவுக்கே முன்மாதிரியாக உள்ளனர்.
விஜயபாஸ்கர்: அதிமுக ஆட்சியில் 6 ஆண்டுகளாக மருத்துவ துறை முதலிடத்தில் இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக அதை விட்டு விட்டீர்கள்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: தமிழகம் தற்போது பின்னடைவில் இல்லை.

You may also like

Leave a Comment

4 + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi