ஐதராபாத்: தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று சோதனையிட்டனர். தெலங்கானாவில் 17 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 13ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சி தனித்து போட்டியிடுகிறது.
இந்நிலையில் தேர்தல் பணிகளின் ஒருபகுதியாக ஐதராபாத்தில் இருந்து 170 கிமீ தொலைவில் உள்ள சூர்யாபேட் மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை பற்றி கேட்டறிய கே.சி.ஆர், நேற்று தன் வாகனத்தில் சென்றார். அப்போது எடுலாபரே தண்டா சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கே.சி.ஆரின் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.