டெல்லி : மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என உச்ச நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு ஒப்புகைச்சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரிய வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதங்களை முன்வைத்தார். இவிஎம், விவிபாட் இயந்திரங்களில் 2 விதமான சிப்கள் பொருத்தப்பட்டுள்ளதால் முறைகேடு செய்ய முடியும் என்றும் இவிஎம் இயந்திரத்தின் முதல் மெமரி சிப், சின்னங்கள் பதிவுசெய்யும்போது புரோகிராம் செய்யப்படுகிறது என்றும் பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.