சென்னை: உலகின் மிக உயரிய எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ள இளைஞர் ராஜசேகர் பச்சைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு:
பல்வேறு விளையாட்டுகளிலும் நம் இளைஞர்கள் முத்திரை பதித்து நம்மையும், தமிழ்நாட்டையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறார்கள். அந்தவகையில் கோவளத்தைச் சேர்ந்த ராஜசேகர் பச்சை எனும் இளைஞர் உலகின் மிக உயரிய எவரெஸ்ட் சிகரத்தைத் தன் விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் ஏறி அடைந்துள்ளார் என்று அறிந்து மகிழ்ந்தேன். அவருக்கு எனது பாராட்டுகள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.