Tuesday, May 21, 2024
Home » ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உடல்நலம் குன்றி உயிருக்கு போராடி வரும் காட்டு யானை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உடல்நலம் குன்றி உயிருக்கு போராடி வரும் காட்டு யானை

by Suresh

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே யானை உயிருக்கு போராடி வருகிறது. உடல்நலம் குன்றி நிலத்தில் படுத்துள்ளது. நிகழ்விடத்திற்கு வனத்துறை விரைந்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 11 வனசரகங்கள் உள்ளன.

இதில் சத்யமங்கலத்தை அடுத்து உள்ள கடம்பூர் வனசரகத்திற்குட்பட்ட குரும்பூர் கிராம வனப்பகுதியிலிருந்து நேற்று இரவு யானை ஒன்று தள்ளாடிய நிலையில் கிராமத்தின் முக்கிய சாலையிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலத்தில் நடக்க முடியாமல் விழுந்தது.

இன்று காலை அப்பகுதிக்கு சென்ற மக்கள் யானை படுத்திருப்பதை கண்டு கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வனத்துறையினர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்று உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவுகிறது. தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாகவும் யானைக்கு உடல்நலம் குன்றியிருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உடல்நலம் குன்றிய பெண் யானையால் எழுந்து நடக்க முடியுமா என்பது கேள்வி குறியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

You may also like

Leave a Comment

four × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi