*ரோஜா பூ கொடுத்து உற்சாக வரவேற்பு
ஈரோடு : முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் தேசிய ஆசிரியர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, ஆசிரியர் தினமான நேற்று ஈரோடு மாநகரில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளகிளில் ஆசிரியர் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில், ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினத்தையொட்டி மாணவிகள் தங்களின் வகுப்பாசிரியர்களுக்கு பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், ஆசிரியர்களுக்கான போட்டிகளும் நடத்தப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டியும், கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. தொடர்ந்து, ஆசிரியர் தினத்தின் சிறப்பு, முன்னாள் துணை குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் செய்த பணிகளின் சிறப்புகள் குறித்து மாணவ-மாணவிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இதேபோல, பல்வேறு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரால் ஆசிரியர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு இடையே போட்டிகளும் நடத்தப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர் தினம் நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது.