சென்னை: எர்ணாவூரில் மழைநீருடன் கச்சா எண்ணெய் கலந்து வந்தது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எர்ணாவூரில் மழைநீருடன் கச்சா எண்ணெய் கலந்து வந்தது தொடர்பாக தாமாக முன்வந்து பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வருகிறது. எர்ணாவூரில் மழைநீருடன் கச்சா எண்ணெய் கலந்து வந்தவிவகாரத்தில் பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் செய்து வருகிறது. மழைநீரில் கச்சா எண்ணெய் கலந்துள்ளது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக நிறுவனங்கள் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.