சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 36ஆவது முறையாக காவல் நீட்டித்துள்ளனர். காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 4ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். செந்தில் பாலாஜி மனு மீது ED பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 4-க்கு சென்னை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த -மற்றொரு மனு மீது இன்று உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை.