சத்தீஸ்கர்: அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்றவற்றால் மிரட்டுவதன் மூலம் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது பாஜக என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் தெரிவித்துள்ளார். பாஜக தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளதாக பூபேஷ் பகேல் விமர்சனம் செய்துள்ளார். 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் மீண்டும் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை தனது பணிகளை தொடங்கும். சிறிய இடைவேளைக்குப் பின் மக்களவை தேர்தலை மையமாக வைத்து ஒன்றிய அரசின் ஏவல் பணிகளை ED செய்யும் என்று பகேல் கூறியுள்ளார்.