சென்னை: மின்சாரக் கட்டணம் குறித்த மத்திய அரசு சுற்றறிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாயமில்லை என்று டி.என்.இ.பி. தெரிவித்துள்ளது. மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்த அனைத்து இணைப்புகளிலும் ஸ்மார்ட் மீட்டர் அவசியம். ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணி தமிழ்நாட்டில் தற்போது தான் தொடங்கியுள்ளது. ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணிநிறைவடைய 3 ஆண்டுகள் ஆகும் என்பதால் திட்டம் அமலாக வாய்ப்பு இல்லை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.