சென்னை: தமிழ்நாட்டில் ரூ.744 கோடி மதிப்பீட்டில் மின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 2 ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாளொன்றுக்கு 12 முதல் 16 மணி நேரம் வரை விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் மின்தேவை அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார்.