Saturday, May 11, 2024
Home » தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் 4 நாட்கள் மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் 4 நாட்கள் மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து

by Dhanush Kumar
Published: Last Updated on

சென்னை: தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் 4 நாட்கள் மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, சென்னை பேசின்பிரிட்ஜ் – வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்கள் இடையே இன்று முதல் 14ம் தேதி புதன்கிழமை வரை 4 நாட்கள் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. எனவே, இந்த நாட்களில் சில மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிற்கு இரவு 10.35 மணிக்கு செல்லும் ரயில், ஆவடிக்கு இரவு 11.30 மணிக்கு செல்லும் ரயில்களும், அதேபோல் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து சென்டரலுக்கு இரவு 11.55 மணிக்கு செல்லும் ரெயிலும், இன்றும், 13ம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கு அதிகாலை 1.20 மணிக்கு செல்லும் ரயில், திருவள்ளூரில் இருந்து சென்டரலுக்கு அதிகாலை 4.45 மணிக்கு புறப்படும் ரயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து சென்டரலுக்கு அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் ரயில், சென்டிரலில் இருந்து திருவள்ளூருக்கு அதிகாலை 5.40 மணிக்கு புறப்படும் ரயில்கள் நாளை(திங்கட்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

ஆவடியில் இருந்து சென்டரலுக்கு அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் ரயில், சென்டிரலில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிற்கு அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் ரயில் வரும் 12 மற்றும் 14ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து சென்டரலுக்கு இரவு 10.45 மணிக்கு செல்லும் மின்சார ரயில் இன்றும், 13ம் தேதியும் ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். சென்டிரலில் இருந்து திருவள்ளூருக்கு அதிகாலை 3.50 மணிக்கு இயக்கப்படும் ரயில் வரும் 14ம் தேதி ஆவடியில் இருந்து இயக்கப்படும். சென்டிரலில் இருந்து திருவள்ளூருக்கு அதிகாலை 4.30 மணிக்கு செல்லும் ரயில் வரும் 12 மற்றும் 14ம் தேதிகளில் ஆவடியில் இருந்து இயக்கப்படும்.

 

You may also like

Leave a Comment

two × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi