சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான விடுதலைச் சிறுத்தைகளுக்கு மாநிலம் முழுவதும் கணிசமான வாக்கு வங்கி உள்ளதால் 2 தனித் தொகுதி, ஒரு பொதுத் தொகுதி என 3 தொகுதிகளில் போட்டியிட திருமாவளவன் திட்டமிட்டு இருந்தார். ஆனால் சிதம்பரம், விழுப்புரம் என 2 தனி தொகுதிகளை திமுக ஒதுக்கியது. கடந்த தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் ரவிகுமார் போட்டியிட்டனர். இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு அளிக்காமல் நேரடியாக வேட்பாளர்களை அறிவிக்க விசிக திட்டமிட்டுள்ளது. விசிக சார்பில் திருமாவளவன், ரவிகுமார் மீண்டும் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.