போபால்: சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மத்தியபிரதேச பா.ஜ எம்எல்ஏ காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மத்தியபிரதேச மாநிலத்தில் பா.ஜ ஆட்சி நடக்கிறது. அங்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பா.ஜவில் இருப்பவர்கள் பலர் காங்கிரஸ் கட்சிக்கு தாவி வருகிறார்கள். இதே போல் பா.ஜ எம்எல்ஏ ஒருவரும் இணைந்துள்ளார்.
மபி மாநிலம் கொலரஸ் தொகுதி பா.ஜ எம்.எல்.ஏ வீரேந்திர ரகுவன்ஷி. இவர் நேற்று பத்னாவர்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பவார் சிங் ஷெகாவத், பாஜ தலைவர் சந்திர பூஷண் பண்டேலா, பாஜ முன்னாள் உள்துறை அமைச்சர் உமாசங்கர் குப்தாவின் மருமகன் ஆஷிஷ் அகர்வால் கோலு உள்பட ஏராளமான பா.ஜ தலைவர்கள் போபாலில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் மாநிலத் தலைவர் கமல்நாத் மற்றும் மத்தியப் பிரதேச தேர்தல் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.