தேனி: தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என அமமுக பொதுச்செயலாளரும், அந்த கட்சியின் தேனி தொகுதி வேட்பாளருமான டிடிவி தினகரன் கூறினார்.
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியில் அமைந்துள்ள பட்டாளம்மன்கோயிலில் தேனி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் பிறந்தது தஞ்சை மண் என்றபோதும், எனக்கு அரசியல் வாழ்க்கை துவங்கியது தேனி மாவட்டத்தில்தான். கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மண்ணில் மீண்டும் போட்டியிடுகிறேன். அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். நான் யாருக்கும் குரு இல்லை. நான் அம்மாவின் சிஷ்யன். தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.